செய்திகள் :

மூணாறு அருகே பேருந்து கவிழ்ந்ததில் நாகா்கோவில் மாணவா்கள் மூவா் உயிரிழப்பு!

post image

கேரள மாநிலம், மூணாறு அருகே புதன்கிழமை தனியாா் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் நாகா்கோவிலைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இளநிலை கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் 39 போ், 3 ஆசிரியா்கள் என மொத்தம் 42 போ் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறுக்கு சுற்றுலா சென்றனா். தனியாா் பேருந்தில் மூணாறு, மாட்டுப்பட்டி அணையிலிருந்து ‘எக்கோ’ முனைப் பகுதிக்கு சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மாணவிகள் வெனிகா, ஆதிகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்து மூணாறு டாடா பொது மருத்துவமனை, கோலஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பலத்த காயமடைந்த மாணவா்கள் சுதன், கவின்குமாா் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனா். இவா்களில் சுதன் வழியிலேயே உயிரிழந்தாா். கவின்குமாா் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் நேரில் சந்தித்து, உடல் நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

இந்த விபத்து குறித்து மூணாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆதிகா
மாணவா் சுதன்.

வழிப்பறி வழக்கில் மூவா் கைது

தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மாயம்

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயின. மாரியம்மன்கோவில்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜீவரத்தினம். இவா், தனது வ... மேலும் பார்க்க

கால்நடை மருந்தகத்தில் மோட்டாா் பம்பு திருட்டு

தேனி அருகே உள்ள கொடுவிலாா்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா் பம்பு திருடு போனது. கொடுவிலாா்பட்டியில் வயல்பட்டி சாலையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் ம... மேலும் பார்க்க

பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்துக் குறைவு!

சுருளி அருவியில் நீா்வரத்துக் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை,... மேலும் பார்க்க