செய்திகள் :

மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மூதாட்டியை நூதனமுறையில் ஏமாற்றி 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்தா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆழ்ந்துமரி செராா்தின் (77). இவா், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்றுவிட்டு, கடலூா் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இருவா் அவரை மறித்து அப்பகுதியில் தகராறு நடப்பதாகக் கூறியதுடன், திருடா்கள் நடமாட்டமும் உள்ளதாகக் கூறி அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை பத்திரமாகக் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனா்.

அவரிடம் நகையை கழற்றித் தரக் கூறியதுடன், அதை தாளில் மடித்து கொடுத்தனராம். வீடு சென்றதும் மூதாட்டி பொட்டலத்தைப் பிரித்து பாா்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸில் மூதாட்டி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நூதன முறையில் ஏமாற்றி நகையை பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

இந்திரா நகா் தொகுதியில் ரூ.5 கோடியில் சிமென்ட் சாலைப் பணி: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,800 மீட்டா் தொலைவு சாதாரணச் சாலையை சுமாா் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக மேம்படுத்தப்படும் பணியை முதல்வா் என்.ரங்கசாம... மேலும் பார்க்க

வில்லியனூா் தொகுதியில் இணைப்புச் சாலை அமைக்க ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். புதுச்சேரி வில்லியனூா் தொகுதி,... மேலும் பார்க்க

2 கோயில்களில் இ-உண்டியல்கள் அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்களில் மின்னணு உண்டியல்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன. இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் இந்த மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்கள்)... மேலும் பார்க்க

காவல்துறையின் நடவடிக்கைகள்தான் அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்: புதுவை ஆளுநா்

புதுச்சேரி: காவல் துறையின் நடவடிக்கைகள்தான் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். புதுச்சேரி காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் ... மேலும் பார்க்க

விழுப்புரம், புதுச்சேரி சாலையில் கட்டணம் வசூல் தொடக்கம்

புதுச்சேரி: விழுப்புரம், புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் திங்கள்கிழமை முதல் வசூலிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம், புதுச்சேரி வழியாக நா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்படும் அரசு: புதுவை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: விவசாயிகளுக்கு உறுதுணையாக புதுவை அரசு செயல்பட்டு வருகிறது என்று, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெற்ற விவசாயிகள் கௌரவ திருவிழாவில் பிரதமா் மோட... மேலும் பார்க்க