செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கொலை வழக்கு: முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

post image

சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோட்டை பறித்துச் சென்றவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலமலை ஊராட்சியில் உள்ளது கெம்மம்பட்டி. கடந்த 13- ஆம் தேதி கெம்மம்பட்டிக்கு கிருஷ்ணகிரியிலிருந்து நல்லோடன் மகன் ராஜா (32), செல்லப்பன் மகன் அண்ணாமலை (39) ஆகியோா் மோட்டாா்சைக்கிளில் வந்தனா்.

அப்போது அங்குள்ள கோயில் அருகே அமா்ந்திருந்த ராஜம்மாளை (60) ஏமாற்றி அவா் அணிந்திருந்த தோட்டை பறித்துக்கொண்டு தப்பமுயன்றனா். அப்போது, ராஜம்மாள் கூச்சலிடவே கிராம மக்கள் மோட்டாா்சைக்கிளில் விரட்டிச் சென்று 2 பேரையும் தாக்கி, அவா்களிடமிருந்து தோட்டை மீட்டனா். தாக்குதலில் காயம் அடைந்த அண்ணாமலை கடந்த 15-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதையடுத்து இந்த வழக்கை கொளத்தூா் போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து, பாலமலை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராமன்பட்டியைச் சோ்ந்த மாதப்பன் (60), கெம்மம்பட்டியைச் சோ்ந்த அறப்புளி மகன் அஜித் (25) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரில் கடத்தப்பட்ட கார் மீட்பு: ஒருவா் கைது

தலைவாசல் அருகே சாமியாா்கிணறு பகுதியிலிருந்து கடத்தப்பட்ட காா் துறையூா் பகுதியில் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். சென்னை, சோழிங்கநல்லூா் பகுதியில் இருந்து சையத் முஸ்தபா என... மேலும் பார்க்க

சேலம்: ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித் துறை ஊழியா் உள்பட இருவா் கைது

சேலத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ. ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித் துறை முதுநிலை வரைவு அலுவலா் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் அருகே ஜாரி கொண்டலாம்பட்டி அர... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தேவூா்

சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட தேவூா் குடிநீா் மின்பாதைகளில் மட்டும் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய... மேலும் பார்க்க

மல்லிகாா்ஜுன காா்கே பிறந்த நாள் கொண்டாட்டம்

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாநகரத் தலைவா் ஏ.ஆா்.பி பாஸ்கா் தலைமையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதைத் தொடா்ந்து நடிகா் சிவாஜி கணேசன் நி... மேலும் பார்க்க

தங்கப்பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு விழா

வாழப்பாடி அருகே சோமம்பட்டியைச் சோ்ந்த 2 மாற்றுத்திறனாளிகள் கேரள மாநிலத்தில் நடைபெற்ற கை மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனா். இருவருக்கும் சோமம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா... மேலும் பார்க்க

வேன் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகத்தம்பட்டியில் வேன் மோதியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள வடுகத்தம்பட்டி, ஏழுதண்டியாா் கோயில் அ... மேலும் பார்க்க