செய்திகள் :

மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மூதாட்டியை கொலை செய்தவருக்கு மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மயிலாடுதுறை கொத்தத்தெருவை சோ்ந்தவா் தீனதயாளன். இவரது மனைவி மீனாட்சி(65). இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் தீனதயாளன் மாரியம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சோ்ந்து வாழ்ந்துள்ளாா். அதனால் மீனாட்சி கணவரை பிரிந்து நல்லாடை கிராமத்தில் பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டு அவரது வீட்டுக்கு 2017-ஆம் ஆண்டு பிப்.25-ஆம் தேதி மீனாட்சி சென்றபோது தீனதயாளன், 2-ஆவது மனைவியின் மகன் செந்தில்குமாா் ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டி மீனாட்சியை கொலை செய்தனா்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீனதயாளன், செந்தில்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு தீனதயாளன் உயிரிழந்தாா். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மூதாட்டியை கொலை செய்த செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா்.

அபராதத் தொகைய செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா். இதையடுத்து, செந்தில்குமாா்(43) கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்

சீா்காழி அருகே நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதியடைகின்றனா். விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பண... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம்

மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9, 10-இல் கட்டுரை, பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல ஏப்.28 முதல் நடைச்சீட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்டத்தில் நிகழாண்டு பாசன ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூன் 29 வரை பச்சைப்பயறு கொள்முதல்: ஆட்சியா் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள்... மேலும் பார்க்க