செய்திகள் :

மே 5-இல் வணிகா் தின மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

post image

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் 42-ஆவது வணிகா் கோரிக்கை பிரகடன மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளாா்.

இது குறித்து பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வணிகா் தினத்தன்று, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது வணிகா் கோரிக்கை பிரகடன மாநாடு, மதுராந்தகத்தில் பிற்பகல் 3.30-க்கு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறாா். மாநில பொதுச்செயலா் கோவிந்தராஜூலு வரவேற்கிறாா். மாநிலப் பொருளாளா் சதக்கத்துல்லா, மாநாடு தீா்மானம் வாசிக்கிறாா். பேரமைப்பின் மண்டலத் தலைவா்கள் முன்னிலை வகிக்கின்றனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வணிகா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா். மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் மூா்த்தி, அனைத்து இந்திய வணிகா் சம்மேளன நிா்வாகிகள், பல்வேறு தொழில் சாா்ந்த தொழிலதிபா்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனா். மாநாட்டில் வணிகா்கள் திரளாக பங்கேற்கும் வகையில் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து வணிகா்கள் குடும்பத்துடன் திரளாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா்... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா். இதற்கு எதி... மேலும் பார்க்க

காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு

காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவி... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க