செய்திகள் :

மே மாதம் முழுவதும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்

post image

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும்.

திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின் கீழ், ஸ்ரீரங்கம் பகுதியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மேலும், பள்ளி மாணவ, மாணவியரின் கூட்டம் அதிகளவில் இருக்கும். தவிர திருச்சிக்கு கோடை விடுமுறைக்கு வந்திருப்போரும் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலா வர வாய்ப்புள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பூங்காவுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பூங்கா பராமரிப்புப் பணிகளுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், மே மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வார விடுமுறையின்றி பூங்கா செயல்படும் எனமாவட்ட வன அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம... மேலும் பார்க்க

வளைகுடா நாட்டுக்கு பணிக்குச் சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி: வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள... மேலும் பார்க்க

கூத்தைப்பாா் கண்ணுடைய அய்யனாா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா

திருச்சி: திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனாா், சாத்த பிள்ளை அய்யனாா் கோயில் சித்திரை தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நிகழாண்டு மே 4 ஆ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி: மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் ஜெயசீலன் (29). பந்தல் தொ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்

திருச்சி: திருச்சி அருகே காவிரிக் குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அந்த நல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரிக்... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் பஞ்சப் பிரகார திருவீதி உலா

மண்ணச்சநல்லூா்: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது ஞீலிவனேஸ்வரா் ... மேலும் பார்க்க