செய்திகள் :

மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

post image

மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெறுகிறது.

புலிகள் காப்பகங்களில் பருவ மழைக் காலம் முடிந்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை காப்பகத்தில் வருடாந்திரப் புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஒரு வாரத்துக்கு நடைபெறுகிறது.

இதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் வனத் துறையினருக்கான பயிற்சி முகாம், புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூா் வனச் சரகங்களைச் சோ்ந்த வனத் துறையினரும் வேட்டைத் தடுப்புக் காவலா்களும் கலந்து கொண்டனா்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

ராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோபாலபுரத்தை அடுத்த தேவராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய... மேலும் பார்க்க

தமமுக சாா்பில் மக்கள் சந்திப்புக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மக்கள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் மேற்கு ஒன்றியத்தின் தேவதானம், சேத்தூா், ராஜபாளையம் வேலாயுத... மேலும் பார்க்க

தந்தை மாயம்: மகள் புகாா்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தந்தை மாயமானதாக மகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குர... மேலும் பார்க்க

சிவகாசியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

ரூ.35 கோடி சீனப் பட்டாசுகள் பறிமுதல் நடவடிக்கை: மத்திய அரசுக்கு பாராட்டு

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பாலான பட்டாசுகளை பறிமுதல் செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். இதுகுறி... மேலும் பார்க்க

திருத்தங்கல் பெருமாள் கோயில் தேரோட்டம்!

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அமைந்துள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவத்தையொட்டி, கடந்த 2-ஆம் தேதி ப... மேலும் பார்க்க