செய்திகள் :

மேகாலயாவுக்கு சுற்றுலா சென்ற தம்பதி மாயம்: போலீஸ் விசாரணை !

post image

மேகாலயாவுக்கு சுற்றுலா சென்ற இளம் தம்பதி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது.

அவர்களின் வாடகை இருசக்கர வாகனம் சோஹ்ரா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான தம்பதியினரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்விக்காக ரூ. 3,400 கோடியைத் தானமாக வழங்கிய ஜாக்கி சான்?

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தம்பதியினர் மாயமானதாகவும், அவர்களின் மொபைல் போன்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சகோதரர் கோவிந்த் தெரிவித்தார்.

காவல்துறையினர் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் என்றார். இதனிடையே மாயமான தம்பதி கடைசியாக சோஹ்ரா பகுதியில் காணப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க