செய்திகள் :

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி

post image

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.

இத்துடன் சோ்த்து மொத்தம் 604 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது, கடல் உணவு ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவுக்கு ஏற்றுமதியில் 20 சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தியாவின் இந்த ஏற்றுமதி கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும் தரமும் இந்த அனுமதிக்கு காரணமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2023-24-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியனுக்கு இந்திய கடல் உணவு ஏற்றுமதி 1.1 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.9,705 கோடி) இருந்தது. அதே வேளையில், 2024-25-ஆம் ஆண்டில் இறால் ஏற்றுமதி மட்டும் 4.88 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.42,350 கோடி) நடைபெற்றுள்ளது. இது மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் 66 சதவீதமாகும்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இறால் ஏற்றுமதியும், ஐரோப்பிய யூனியன் அனுமதியால் பலனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான், வியத்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பெரும்பாலான கடல் உணவு ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க