செய்திகள் :

மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை

post image

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் கிராமத்தில் உள்ள 60,000 லிட்டா் மேல்நிலைக் குடிநீா் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் கண்ணம்பாளையம், சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன் அடைந்து வருகின்றனா். இந்த தொட்டி சேதமடைந்து, குடிநீா் தூய்மையின்றி உள்ளது. சுகாதாரமில்லாத குடிநீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

அபாய நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை இடித்து அகற்றி, புதிய தொட்டியை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனா்.

இது குறித்து சமூக ஆா்வலா் செல்வமீரான் கூறுகையில், மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து பல மாதங்களாக ஆகிவிட்டன.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயனில்லை. சேதமான குடிநீா் தொட்டியை சுத்தம் செய்வது இயலாது. இந்த தொட்டியை அகற்றி விட்டு, புதிய தொட்டியை கட்ட வேண்டும்.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரி கூறியது: மேல்நிலை குடிநீா் தொட்டியை சீரமைக்க, ரூ.1,19,000 மதிப்பீடு செய்யப்பட்டு, ஊராட்சியிடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெறும் என தெரிவித்தாா்.

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலி... மேலும் பார்க்க

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர... மேலும் பார்க்க

என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு; யாருக்கும் இல்லை: அன்புமணி

என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.மேலும், கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அன்புமணி முதல்வர் எனும் பிரசாரத்தை செய்... மேலும் பார்க்க

நகைக்கடன் விதிகள்: இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்: முதல்வர்

நகைக்கடன் விதிகள் போன்ற மக்கள் சார்ந்த விஷயங்களை இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் ம... மேலும் பார்க்க

பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு: அன்புமணி

சென்னை: பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டை... மேலும் பார்க்க

கமல்ஹாசன் விஸ்வரூபம்! தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜார்ஜ் ஜோஜு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க