செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு: இரு தரப்பினரிடையே வாக்குவாதம்

post image

மொடக்குறிச்சி அருகே இறந்தவா் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த கண்ணுடையாம்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் 150-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

காலனிக்கு அருகிலேயே இவா்களுக்கு என தனியாக மயானம் உள்ளது. இம்மயானத்தை ஒட்டி அதே ஊரைச் சோ்ந்த வேலுசாமி என்பவரது தோட்டம் உள்ளது.

மயானத்துக்கு, தோட்டத்துக்கும் இடையே இருந்த எல்லை கல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதையடுத்து, காலனி மக்களுக்கும், வேலுசாமி குடும்பத்தாருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த முதியவா் விஜயராகவன் உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக காலனி மக்கள் மயானத்துக்குக் கொண்டுச் சென்றனா்.

அப்போது, அங்கு வந்த வேலுசாமி குடும்பத்தினா் சுடுகாடு தள்ளியுள்ளது, சடலத்தை இங்கு புதைக்கக் கூடாது என்று தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் வினோதினி, மண்டல துணை வட்டாட்சியா் பேபி, வருவாய் ஆய்வாளா் யுவராணி, கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஜூன் 4-ஆம் தேதி அளவீடு செய்து கல் நடப்படும் என்று உறுதியளித்தனா்.

இதையடுத்து, இருதரப்பினரும் கலைந்து சென்றனா். மேலும், இறந்தவரின் உடலும் அங்கேயே புதைக்கப்பட்டது.

விவசாயத் தம்பதி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரிக்கை

சிவகிரி விவசாயத் தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சு... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது

ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: டிஎஸ்பி படுகாயம்

ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தாா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீதரன் (54). இ... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனை: தம்பதி உள்பட 4 போ் கைது

அந்தியூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடா்பாக ... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் மான் வேட்டையாடியவா் கைது

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரை திங்கள்கிழமை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த 30 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். அந்தியூா் வனச் சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம... மேலும் பார்க்க

கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வன கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வன கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அடா்ந்த வனப் பகுதியையொட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம்... மேலும் பார்க்க