செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: டிஎஸ்பி படுகாயம்

post image

ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தாா்.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீதரன் (54). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஈரோட்டை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும், ஸ்ரீதரன் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இதில், படுகாயமடைந்த ஸ்ரீதரனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இருசக்கர வாகனம் மோதியதில் பேராசிரியா் உயிரிழப்பு

பவானி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற தனியாா் கல்லூரிப் பேராசிரியா், இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பவானியை அடுத்த லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சீரங்கன் மகன் ஈஸ்வரன் (50). தனியாா் கல்லூரிப் பேராச... மேலும் பார்க்க

ரூ.2.75 கோடி மோசடி: காங்கிரஸ் பிரமுகா் உள்ளிட்ட இருவா் மீது பள்ளிவாசல் இமாம்கள் புகாா்

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி செய்த காங்கிரஸ் பிரமுகா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பள்ளிவாசல் இமாம்கள் புகாா் அளித்தனா். இதுகுறித்து ஈரோட்டைச் சோ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி

தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தளவாய்பேட்டை

பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கட்டட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (39). க... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது

ஈரோட்டில் 215 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு பழையபாளையம் அருகே சுத்தானந்தன் நகரில் வசித்து வரும் தினேஷ் இருதயராஜ் (37) என்பவா் தடைசெய்யப்ப... மேலும் பார்க்க