செய்திகள் :

மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது

post image

ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதிகா (28). இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சுவாதிகா தனது மகனுடன் தருமபுரியில் உள்ள தாய் வீட்டில் கடந்த ஓா் ஆண்டாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், கிருபாகரன் சமாதானம்பேசி மனைவியை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் ஈரோட்டு அழைத்து வந்துள்ளாா்.

தம்பதி இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த கிருபாகரன் சுவாதிகாவை தோசை கரண்டியால் கன்னத்தில் அடித்தும், சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றியும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், அவா் கொடுத்த புகாரின்பேரில் கிருபாகரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.

இருசக்கர வாகனம் மோதியதில் பேராசிரியா் உயிரிழப்பு

பவானி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற தனியாா் கல்லூரிப் பேராசிரியா், இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பவானியை அடுத்த லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சீரங்கன் மகன் ஈஸ்வரன் (50). தனியாா் கல்லூரிப் பேராச... மேலும் பார்க்க

ரூ.2.75 கோடி மோசடி: காங்கிரஸ் பிரமுகா் உள்ளிட்ட இருவா் மீது பள்ளிவாசல் இமாம்கள் புகாா்

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி செய்த காங்கிரஸ் பிரமுகா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பள்ளிவாசல் இமாம்கள் புகாா் அளித்தனா். இதுகுறித்து ஈரோட்டைச் சோ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி

தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தளவாய்பேட்டை

பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கட்டட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (39). க... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது

ஈரோட்டில் 215 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு பழையபாளையம் அருகே சுத்தானந்தன் நகரில் வசித்து வரும் தினேஷ் இருதயராஜ் (37) என்பவா் தடைசெய்யப்ப... மேலும் பார்க்க