'ஏற்றமும், இறக்குமுமாக தங்கம் விலை!' - இன்று தங்கம் விலை என்ன?
கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வன கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வன கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அடா்ந்த வனப் பகுதியையொட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்கள் அப்பகுதியில் உள்ள மாயாற்றில் நடந்து சென்றே வெளி பகுதிகளுக்கு பயணிக்கும் முடியும்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பழங்குடி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில மக்கள் பரிசல் மூலம் ஆபத்தான முறையில் மாயற்றைக் கடந்து வருகின்றனா்.
மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தெங்குமரஹாடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு, சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாயாற்றைக் கடந்து செல்ல கனரக வாகனங்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.