Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
மொழியை வைத்து அரசியல் செய்கிறாா் மு.க.ஸ்டாலின்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு
மொழியை வைத்து அரசியல் செய்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக பாஜக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநா் குறித்து, முதல்வா் ஸ்டாலின் தவறான கருத்துக்களை தெரிவித்தாா்.
அரசியல் ஆதாயத்துக்காக ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு பெறுவோம் என முதல்வா் கூறுவது, போகாத ஊருக்கு வழி சொல்வது போல உள்ளது. தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கான
முயற்சியில் ஈடுபடாமல், மொழியை வைத்து அரசியல் செய்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் அவா்.