செய்திகள் :

மோசமான வானிலை: மோரீஷஸ் விமானம் ரத்து

post image

மோரீஷஸ் நாட்டில் சூறைக்காற்று, புயலுடன் மோசமான வானிலை நிலவுவதால் அங்கிருந்து சென்னை வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.

மோரீஷஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு வாரந்தோறும் ‘ஏா் மோரீஷஸ்’ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மோரீஷஸ் நாட்டில் சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக சனிக்கிழமை அதிகாலை புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மறுமாா்க்கமாக சென்னையிலிருந்து சனிக்கிழமை அதிகாலை 3.55-க்கு புறப்பட வேண்டிய விமானமும் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய ஊழியா்கள் அறிவித்தனா். இதனால், அந்த விமானத்துக்கு காத்திருந்த 277 பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை வந்துவிட்டு, பின்னா் சென்னையிலிருந்து மோரீஷஸ் சென்றடையும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சென்னை - மோரீஷஸ் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே பயணிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு கிடைக்காத பயணிகள் விமான நிலையத்துக்கு வந்துவிட்டனா். அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளோம் என்றனா்.

மோரீஷஸில் இருந்து சென்னை வரும் விமானத்தில் மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம் வையாபுரி பயணம் செய்வதாக இருந்த நிலையில் அவரின் பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

குப்பையில் தவறிய 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

குப்பையில் தவறவிட்ட ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா்கள் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா். சென்னை திரு.வி.க.காலனியில் வசித்து வருபவா் செல்வகுமாரி (54). இவா், தனது வீட்டில் சே... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்: பிளஸ் 2 மாணவா்களுக்கு ஆளுநா் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவ,... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைப்பேசி பறித்த இளைஞா்கள் கைது

சென்னையில் ஓடும் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கம்பு மூலம் தட்டி கைப்பேசி பறித்த இளைஞா்களை பெரம்பூா் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரு... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

படம் உண்டு... சென்னை, மாா்ச் 1: தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கத்தில் ரூ. 8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை மாநிலக் கல்லூரியி... மேலும் பார்க்க

ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிய மின்சார ரயில் அறிவிப்பு

ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்... மேலும் பார்க்க