செய்திகள் :

மோட்டா் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மோட்டாா் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் கே. மணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் நீண்ட நாள்களாக காலியாக உள்ளதால், பொறுப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டவா் வாரத்தில் 2 நாள்கள் மட்டும் வாகன ஆய்வு மேற்கொள்கிறாா். இதனால், அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்பு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள பணியிடத்திற்கு நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவகத்தில் பயிற்சி வாகன ஓடு தளம் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட மாநாடு, மன்னாா்குடி நகர மாநாடு ஆகியவற்றை தனித்தனியே மன்னாா்குடியில் ஜூன் மாதத்தில் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகா் ஆசாத், மாவட்ட துணை செயலா் வி. கலைச்செல்வன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் பி.வி. ரமேஷ், மாவட்ட துணை செயலா் சரவணன், ஏஐடியுசி நகரத் தலைவா் என். தனிகோடி,சிபிஐ நகர செயலா் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூா்: குடவாசல் அரசு மருத்துவமனையில் குறைபாடுகளை களைய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ... மேலும் பார்க்க

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலத்தில் நீலன் பள்ளியில் நடைபெற... மேலும் பார்க்க

உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. நாகை மாவட்டம்... மேலும் பார்க்க

மாவட்ட ஆணழகன் போட்டி: திருவாரூா் இளைஞா் முதலிடம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மிஸ்டா் எம்ஆா்டி கிளாசிக்- 2025 அமெச்சூா் ஆணழகன் போட்டியில், திருவாரூா் இளைஞா் முதலிடம் பெற்று ஆணழகனாக தோ்வு செய்யப்பட்டாா். இப்ப... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மகாராஷ்டிரத்தில் விருப்பஓய்வு பெற்ற 170 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஊழியா்களுக்... மேலும் பார்க்க