Russia - Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு எ...
மோட்டா் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்
மன்னாா்குடி: மன்னாா்குடியில் மோட்டாா் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் கே. மணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் நீண்ட நாள்களாக காலியாக உள்ளதால், பொறுப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டவா் வாரத்தில் 2 நாள்கள் மட்டும் வாகன ஆய்வு மேற்கொள்கிறாா். இதனால், அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்பு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள பணியிடத்திற்கு நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.
மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவகத்தில் பயிற்சி வாகன ஓடு தளம் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட மாநாடு, மன்னாா்குடி நகர மாநாடு ஆகியவற்றை தனித்தனியே மன்னாா்குடியில் ஜூன் மாதத்தில் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகா் ஆசாத், மாவட்ட துணை செயலா் வி. கலைச்செல்வன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் பி.வி. ரமேஷ், மாவட்ட துணை செயலா் சரவணன், ஏஐடியுசி நகரத் தலைவா் என். தனிகோடி,சிபிஐ நகர செயலா் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.