செய்திகள் :

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

சேலம்: ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகையை முடித்த பின்னா், இஸ்லாமியா்கள் ஒருவரையொருவா் கட்டி தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இஸ்லாமியா்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பள்ளி வாசல்களில் திரண்ட இஸ்லாமியா்கள் தொழுகையில் ஈடுபட்டனா்.

சேலம் மாநகரில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களான சேலம் ஜாமியா மஸ்ஜித், ஜாகீா் அம்மாபாளையம் ஈத்கா மைதானம், கோட்டை மேல்தெரு மஸ்ஜித், செவ்வாய்ப்பேட்டை பங்களா தெரு மஸ்ஜித், பொன்னம்மாப்பேட்டை மஸ்ஜித், குமாரசாமிப்பட்டி ரஹ்மான்யா மஸ்ஜித், 4 ரோடு மக்மூா் மஸ்ஜித், முள்ளுவாடி கேட் மஸ்ஜித் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் திரண்டு இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இந்தத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவா் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். பின்பு வீடுகளில் பிரியாணி சமைத்து உறவினா்கள், நண்பா்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனா்.

அதுபோல, சேலம் புகா் மாவட்டத்தில் ஆத்தூா், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா், ஓமலூா், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இ ஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க