ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
திருச்சி கோட்டை காவிரிப் பாலம் அருகில் ரயிலில் அடிபட்ட நிலையில் 45 வயதுள்ள ஒருவா் புதன்கிழமை இறந்து கிடந்தாா்.
திருச்சி கோட்டை சஞ்சீவி நகா் காவிரி பாலம் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலம் அடியில் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கோடு போட்ட டீ ஷா்ட் அணிந்திருந்த சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் புதன்கிழமை பகல் அவ்வழியே சென்ற குருவாயூா் விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.
தகவலின்பேரில் திருச்சி ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்தவரின் விவரம் ஏதும் தெரியவில்லை. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 94981 01978 மற்றும் 94981 39839 என்ற எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.