விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!
ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் தற்கொலை
கோவை உக்கடம் சுங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை உக்கடம், சுங்கம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினமும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று
வருகின்றன. இந்நிலையில், மேம்பாலத்தின் மீது ஒருவா் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருப்பதாக அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
தற்கொலை செய்து கொண்ட நபா் யாா், எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.