செய்திகள் :

ரஷ்யா: புதின் நீக்கிய அமைச்சர் காரில் 'பிணமாக கண்டெடுப்பு' - பின்னணி என்ன?

post image

ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட், அதிபர் புதினால் நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார்.

மாஸ்கோவின் புறநகர் பகுதியில் காரில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்யா அதிகாரிகள் கூறுகின்றனர் என செய்திதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதின்
புதின்

"இன்று, ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டின் உடல் அவரது தனிப்பட்ட காரில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது." என ரஷ்யாவின் புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் புதினால் நீக்கப்பட்டவர்!

53 வயது நபரான ரோமன் ஸ்டாரோவாய்ட் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட ஒரு ஆண்டிலேயே அதிபர் புதினால் நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கம் குறித்து வெளியான அரசாணையில் அதற்கான காரணம் எதுவும் விளக்கப்படவில்லை.

எனினும் சில அரசியல் விமர்சகர்கள், குர்ஸ்க் மாகாணத்தில் நடைபெறும் ஊழல் விசாரணைகளுடன் தொடர்புகொண்டதாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

 ஸ்டாரோவாய்ட்
ஸ்டாரோவாய்ட்

ஸ்டாரோவாய்ட்டைத் தொடர்ந்து துணை போக்குவரத்து அமைச்சராக இருந்த ஆண்ட்ரி நிகிடின் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அமைச்சர் பதவிக்கு வரும்முன் ஸ்டாரோவாய்ட், குர்ஸ்க் மாகாணத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்துள்ளார்.

குர்ஸ்க் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியபோது இவரது பதவி ஆட்டம் கண்டது. உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ஒதுக்கப்பட்ட நிதியிலேயே ஊழலும் நடந்திருப்பதாக சில அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சுமார் 1 பில்லியன் ரூபிள் வரை ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 105 கோடி ரூபாய்.

இந்த ஊழல் விசாரணையில் ஸ்டாரோவாய்டின் வாரிசு அலெக்ஸி ஸ்மிர்னோவ் உட்பட பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்'' - இபிஎஸ்

கடலூரில் இன்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி மற்றும் ஆறாம் வகுப்பு நிவாஸ் ஆ... மேலும் பார்க்க

UP: 7-ம் வகுப்பு மாணவிக்கு யோகி ஆதித்யநாத் அளித்த நம்பிக்கை; மறுத்த பள்ளி நிர்வாகம் - என்ன நடந்தது?

பன்குரி திரிபாதி என்ற 7-ம் வகுப்பு மாணவி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தனது கல்விக்கு உதவி கேட்டது, அந்த மாநிலத்தில் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. பன்குரியின் தந்தை ராஜீவ் குமார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்

நேற்று, ஜூலை 7, 2025 அன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் உற்சாகத்தோடு தொடங்கியது எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’அதிமுக பொதுச் செயலாளரும், சட்... மேலும் பார்க்க

Secularism: `மதச்சார்பின்மையை நீக்க நினைக்கும் பாஜக' - என்ன தான் பிரச்னை? | ஓர் அலசல்

``சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற இரண்டு சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (வைணவ மடங்கள... மேலும் பார்க்க

ட்ரம்ப் 15 நாடுகளுக்கு கடிதம்; `Just Miss' ஆன இந்தியா! இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தத்தின் நிலை என்ன?

ஏப்ரல் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று, இப்போது மீண்டும் ஹெட்லைன்களில் இடம்பெற தொடங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'யின் மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் நாளை அற... மேலும் பார்க்க