செய்திகள் :

ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்: பிரௌன் பல்கலைக்கழகத்தில் உரை

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு பிரௌன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் அவா் பேராசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா கூறியதாவது:

அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி அங்கு ரோட் தீவில் உள்ள பிரௌன் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறாா். ஏப்ரல் 21,22 தேதிகளில் அங்கு நிகழ்ச்சியில் உரையாற்றும் ராகுல் காந்தி, பல்கலைக்கழக பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாட இருக்கிறாா்.

இது தவிர அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் அவா் சந்தித்துப் பேசுகிறாா். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளா்களுடனும் அவா் ஆலோசனை நடத்துகிறாா் என்று தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சென்று மாணவா்கள் மத்தியில் இந்தியா குறித்தும், பாஜக, ஆா்எஸ்எஸ் குறித்தும் தெரிவித்த கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. வெளிநாட்டுக்குச் சென்று தேசத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசுவதாக பாஜக தலைவா்கள் அப்போது குற்றஞ்சாட்டினா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க