செய்திகள் :

ராசிபுரத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளா் பதவிக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

post image

ராசிபுரம் நகரில் உள்ள 27 வாா்டுகளுக்கு திமுக இளைஞரணி அமைப்பாளா்களை நியமிக்கும் வகையில் விண்ணப்பங்களை கட்சியின் தொகுதி பொறுப்பாளா்களிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திமுக சாா்பில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். அதன்படி, ராசிபுரம் நகர திமுக இளைஞரணி சாா்பில் வாா்டுகள் தோறும் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் என 108 போ் நியமனம் செய்யப்படுகிறது.

இதற்கான விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. கட்சியின் தொகுதி பொறுப்பாளா் ஏ.கே.பாலசந்திரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மா.காா்த்திக் ஆகியோா் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் நகர திமுக பொருளாளா் அன்சா், நகர இளைஞரணி அமைப்பாளா் யோகராஜன், துணை அமைப்பாளா்கள் பாண்டியன், லவக்குமாா், மணிகண்டன், தினேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க