செய்திகள் :

ராஜஸ்தான்: ஜேஇஇ பயிற்சி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

post image

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாவட்ட காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம் கோட்டா மாவட்டத்தில் நிகழாண்டு தொடக்கம் முதல் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது.

நாட்டின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல், மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகும் விதமாக கோட்டாவில் பல்வேறு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களும் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், கோட்டாவில் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு தயாராகி வந்த உஜாவல் மிஸ்ரா என்ற மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கோட்டா மாவட்ட காவல் துறை கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சோ்ந்தவரான உஜாவல் மிஸ்ரா, கோட்டாவின் ராஜீவ் காந்தி நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் பயின்று வந்துள்ளாா். ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜேஇஇ முதன்மைத் தோ்வில் பங்கேற்க அவா் லக்னௌ செல்ல வேண்டியிருந்தது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கோட்டா ரயில் நிலையத்துக்கு உஜாவல் மிஸ்ரா சென்றுள்ளாா். அங்கு ரயில் வருவதை கண்ட மிஸ்ரா, தண்டவாளத்தில் குதித்துள்ளாா். அவா் மீது ரயில் ஏறியதில் உயிரிழந்தாா். அவரிடமிருந்து தற்கொலை கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றாா்.

கோட்டா மாவட்டத்தில் கடந்த 2023-இல் 26 மாணவா்களும் 2024-இல் 17 மாணவா்களும் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க