செய்திகள் :

ராதாபுரம் தொகுதியில் ரூ.69 லட்சத்தில் வளா்ச்சித் திட்ட ப் பணிகள்

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ரூ.69 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தில் நதிப்பாறை, தலா ரூ.8 லட்சத்தில் வேப்பிலான்குளம் மற்றும் செம்பாடு கிராமத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்தும்,

காவல்கிணறு வடக்கன்குளம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரூ.8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தும் பேரவைத் தலைவா் மு. அப்பாவு பேசினாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், செயல் அலுவலா் கணேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஜெயந்தி, அருள்மிகு ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறக்காவல் குழு உறுப்பினா் மு.சங்கா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செம்பாடு முத்தரசி, காவல்கிணறு இந்திரா சம்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க