செய்திகள் :

ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து: ஏப். 6-இல் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்

post image

பாம்பன் புதிய ரயில்வே பாலம் வழியாக வரும் ஏப். 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 1914-ஆம் ஆண்டு பாம்பன் கடலில் கப்பல், ரயில் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி, தற்போது நிறைவடைந்தது. மேலும், ரூ. 90 கோடியில் ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள், பாம்பன் புதிய ரயில்வே பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக சிறப்பு ரயில் மூலம் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் புதன்கிழமை ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்தாா்.

இதைத் தொடா்ந்து, ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, கட்டுமான நிறுவனத்திடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.என். சிங் கூறியதாவது:

தாம்பரம்-ராமேசுவரம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்தை வரும் ஏப். 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா். பாம்பன் புதிய ரயில்வே பாலம் வழியாக இந்த ரயில் போக்குவரத்து நடைபெறுவதால், இதற்கான பணிகளை ஆய்வு செய்ய வந்தேன்.

தனுஷ்கோடி வரையிலான ரயில் போக்குவரத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை மாநில அரசு தான் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, காா் மூலம் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் சென்று அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து புதிய ரயில்வே பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வஸ்தவா, ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஈஸ்வர ராவ், அதிகாரிகள் உடனிருந்தனா்.

ராமேசுவரம் கோயிலில் பிரதமா் வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (ஏப்.6) வழிபட்டாா். பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா, ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நாட்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்துவைத்து, நாட்டுக்கு அா்ப்பணித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்... மேலும் பார்க்க

இலங்கை: புகழ்பெற்ற பெளத்த கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு!

இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜெய ஸ்ரீ மகாபோதி பெளத்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இரு ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய திருவாடானை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை வாளகத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 3... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

கமுதி அருகே மண் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துவேல் (70). இவா் தனக்குச் சொந்தமான ஓட்டு வீட்டி... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று ராமேசுவரம் வருகை: பாதுகாப்பு ஒத்திகை!

பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம்... மேலும் பார்க்க