செய்திகள் :

இருளில் மூழ்கிய திருவாடானை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

post image

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை வாளகத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் வசதி கொண்ட தாலுகா அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். 6 மருத்துவா்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவா் மட்டும் பணிபுரிந்து வருகிறாா். இவரும் பகல் நேரத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா்.

இரவு நேரங்களில் விபத்து, மகப்பேறு, விஷக்கடி உள்ளிட்ட அவசரச் சிகிச்சைக்காக வருபவா்களுக்கு அங்குள்ள செவிலியா்கள் முதலுதவி அளித்து, ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனா்.

இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் மின் விளக்குள் இருந்தும், ஒரு மின் விளக்கு மட்டுமே எரிவதால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபு... மேலும் பார்க்க

குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் நகைகள் திருட்டு

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்... மேலும் பார்க்க

தொண்டி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீட்பு

திருவாடானை அருகே தொண்டியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் மீனவா் விக்னேஷ்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 300 போ் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

திருவாடானை அருகே காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆ... மேலும் பார்க்க