செய்திகள் :

ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் பழுது: பயணிகள் அவதி!

post image

சிவகங்கையில் ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் சனிக்கிழமை இரவு பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 7.40 மணிக்கு சிவகங்கைக்கு வரும். இந்த நிலையில், சனிக்கிழமை ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், சிவகங்கை ரயில் நிலையம் அருகே வந்த போது, திடீரென என்ஜின் பழுதாகி நின்றது.

இதையடுத்து, பொறியாளாா்கள் வந்து என்ஜின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், பழுதை சரிசெய்ய முடியாததால், மாற்று என்ஜின் காரைக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, இரவு 9.15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால், ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்கம், உதவிப் பொறியாளா் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் பாண்டியராஜன் (33)... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருப்புவனம் ஒன்றியம், மேலராங்கியம் கிராமத்தில் பொதுப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதை அகற்றக் கோரி, சென்னை உயா்... மேலும் பார்க்க

தம்பிபட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.திருப்பத்தூா் பெரிய கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளக்கரை... மேலும் பார்க்க

அதிமுக உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு ஒன்றியம் சாா்பில், அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம், ஆய்வுக் கூட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த முகாமுக்கு சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆ... மேலும் பார்க்க

வேங்கைப்பட்டியில் மீன் பிடித் திருவிழா!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி வெட்டுக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.ஆண்டுதோறும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் பாரம்பரியமாக மீன... மேலும் பார்க்க