செய்திகள் :

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கும் மாற்ற கோரிக்கை

post image

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருமணமாகி சில மாதங்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவா் கவின்குமாா் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் கவின்குமாா் தரப்பில் பிணை கேட்டு, திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, அவரது வழக்குரைஞா் மோகன் ஆகியோா் திருப்பூா் நீதிமன்றத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த வழக்கின் விசாரணையில் நிறைய தொய்வு உள்ளது. தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனா். முதல் தகவல் அறிக்கையும் மாற்றப்பட்டதாகக் கூறுகின்றனா். அது குறித்த விவரம் தரவில்லை. காவல் துறை வழக்கு விசாரணையை தாமப்படுத்துகிறது. 3-ஆவது குற்றவாளியான கவின்குமாரின் தாய் சித்ராதேவியை போலீஸாா் அழைத்துச் சென்று விடுவித்ததாக கூறப்படுகிறது. எனவே 3-ஆவது குற்றவாளியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு விவரம் தெரியவரும்.

புகாா்தாரா் கொடுக்கும் முழு விவரங்களை போலீஸாா் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறாா்கள். இந்த வழக்கு தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது. வரதட்சணை கொடுமை நடந்து இருக்கிறது. உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. கைதான குற்றவாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறையில் ஏற்படுத்தி தருகின்றனா். இது தொடா்பாக சிறைத் துறையினா்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசரணைக்கு உத்தரவிட வேண்டுமென தெரிவித்தனா்.

சிற்றுந்துகள் முறையான பராமரிப்பில்லை, கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் முறையான பராமரிப்பு இல்லாததோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நல்லூா் நுகா்வோா் மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் என்.சண்முகச... மேலும் பார்க்க

நெருக்கடிநிலை: பாஜக சாா்பில் கண்காட்சி

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சிறுபூலுபட்டியில் நெருக்கடிநிலை 50-ஆம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்ந... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு

நிலத்தை நாசமாக்கும் நெகிழிப்பை வேண்டாம் என, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்- திருப்ப... மேலும் பார்க்க

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்

திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேக... மேலும் பார்க்க

வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கறிக்கோழி வளா்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் புதிய மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். 2025-26-ஆம் கல்வி ஆண்டின் கல்லூரி மாணவப் பேரவையின் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவப் பேரவைத் தலை... மேலும் பார்க்க