செய்திகள் :

ரூ.1.27 கோடிக்கு ஏலம் போன குடியாத்தம் தினசரி மாா்க்கெட் குத்தகை

post image

குடியாத்தம் தரணம்பேட்டை தினசரி காய்கறி சந்தை ரூ.1.27 கோடி ஏலம் போனது.

குடியாத்தம் நகராட்சி சாா்பில், தினசரி காய்கறி சந்தை, அரிசி கடைகள், இறைச்சிக் கடைகள், ஆடுவதை சாலை, புதிய, பழைய பேருந்து நிலைய கழிப்பறைகள், பேருந்துதாரா்களிடம் கட்டணம் தண்டல் செய்யும் உரிமத்துக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதற்கான ஏலம் நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் மேற்பாா்வையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தையொட்டி பலத்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இதில் தரணம்பேட்டையில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தை ரூ.1.27- கோடிக்கு ஏலம் போனது. 5- போ் ஏலம் கோரிய நிலையில் எஸ்.ஏ.அா்ஷத் ரூ.1.27- கோடிக்கு ஏலம் எடுத்தாா்.

அரிசி கடைகள் ரூ.5.25- லட்சம், இறைச்சிக் கடைகள் ரூ.2.50- லட்சம், பேருந்து நிலைய சுங்க கட்டணம் ரூ.15- லட்சம், ஆடுவதை சாலை ரூ.6.12- லட்சம், புதிய பேருந்து நிலைய கழிப்பிடம்ரூ.11.26- லட்சம், பழைய பேருந்து நிலைய கழிப்பிடம் ரூ.5.75- லட்சம் ஏலம் போனது.

குத்தகை ஏலம் மூலம் குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.1.72- கோடி வருவாய் கிடைக்கும். இது கடந்த ஆண்டு ஏலத் தொகையை விட 60 சதவீதம் கூடுதலாகும்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க