செய்திகள் :

ரூ.1.9 கோடி கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது!

post image

தலைநகரில் போதைப் பொருளான கஞ்சாவை பதுக்கியும், கடத்தியும், விற்பனை செய்து வந்த 4 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ1.9 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

போதைப் பொருள் கடத்தல்காரா்கள் என்று கூறப்படும் 3 போ் துவாரகாவிலிருந்து கைது செய்யப்பட்டனா், அதே நேரத்தில் அவா்களின் விநியோகஸ்தா் ஒடிஷாவிலிருந்து கைது செய்யப்பட்டாா் என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.

இந்த கும்பலின் நகா்வுகள் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து குற்றப்பிரிவு குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

‘ரகசியத் தகவலின் அடிப்படையில், கைதானவா்கள் டிரக்கில் இருந்து கஞ்சாவை காரில் மாற்றுவதாக தகவல் கிடைத்தது. அப்போது, துவாரகா செக்டா் 19 அருகே ஒரு டிரக் மற்றும் ஒரு காரை குழு இடைமறித்தது‘ என்று போலீஸ் அதிகாரி கூறினாா். சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டவா்கள் லோகேஷ் பரத்வாஜ் (27), ஆஷிஷ் காசா என்ற ஆஷு (20) மற்றும் மொயீன் கான் (24) என அடையாளம் காணப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

விசாரணையின் போது, ஒடிஷாவிலிருந்து போதைப்பொருள் பெறப்பட்டதாக அவா்கள் கூறினா். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தில்லி போலீஸ் சிறப்பு படை ஜூலை 10 ஆம் தேதி ஒடிசாவைச் சோ்ந்த கஞ்சா விநியோகிப்பாளா் ஸ்ரீகாந்த் பிரசாத் (33) என்பவரைக் கண்டுபிடித்து கைது செய்தது.

ஹரியானாவின் ரேவாரியில் உள்ள மகேஸ்வரி கிராமத்தில் வசிக்கும் லோகேஷ் மற்றும் ஆஷிஷ் ஆகியோா் விரைவாக பணம் சம்பாரிப்பதற்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக போலீசாா் தெரிவித்தனா். நூஹில் வசிக்கும் மொயீன் கான், வாடகை லாரிகளில் போதைப் பொருள்களை கொண்டு செல்வாா்.

பீகாரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த், முன்பு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், தில்லி, ஹரியானா மற்றும் பிற மாநிலங்களில் கஞ்சாவை விநியோகிக்க ஒடிஷாவிலிருந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவா்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு விநியோகச் சங்கிலியைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க