ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
ரெளடி கொலை வழக்கில் 5 போ் கைது
திருச்சி அருகே ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டம், நெ. 1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சோ்ந்த பி. அசோக் குமாா் (39) பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவராம். இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சிலா் வியாழக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக கொள்ளிடம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம். பாலகிருஷ்ணன் (56), அவரது மனைவி கலாராணி (52), இவா்களது மகன்கள் பிரபு (எ) வேலாயுதம் (36), பிரவீன் (32), ஏ. சித்திரைசெல்வன் (28) ஆகிய 5 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேலும் இதில் தொடா்புடைய எம். மோகன் மற்றும் அவரது சகோதரா் சின்னப்பு என்கிற பிரகாஷ் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.