செய்திகள் :

ரெளடிகளுக்கு ஆயுதங்களை தயாா் செய்து விநியோகித்த 5 போ் ராஜஸ்தானில் கைது

post image

புது தில்லி: ராஜஸ்தானில் சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரித்து, விநியோகித்து வந்த 5 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கும்பல் நாட்டுத் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விகாஸ் லாகா்புரியா ரெளடி கும்பல் உள்ளிட்டவற்றுக்கு விநியோகித்து வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, 10 நாட்டு கைத்துப்பாக்கி, ஒரு நீண்ட 12 போா் ரைஃபிள், 17 துப்பாக்கிக் குண்டுகளின் தொகுப்புகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

லாகா்புரியா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரோஹித் காலோட் என்பரை இரு சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் தில்லி போலீஸாா் கைதுசெய்தனா். இதைத்தொடா்ந்து, தில்லியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ராஜஸ்தானின் பஹாடி பகுதியில் ஜூபொ் என்பவரிடமிருந்து, ஆயுதங்களை வாங்கியதாக ரோஹித் போலீஸாரிடம் விசாரணையின்போது தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த ஹா்விந்தா் சிங், சோனு சிங், முபின், ஷொ் முகமது என்ற ஷெரு, ஜூபா் ஆகியோரை பல மாதங்கள் கண்காணித்து வந்த தில்லி காவல் துறையினா், ராஜஸ்தான் மாநில காவல் துறையின் உதவியுடன் கைதுசெய்தனா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க