ரோஜாவனம் பள்ளியில் போதை விழிப்புணா்வு
கன்னியாகுமரி மாவட்ட மன நலத்திட்டம், போதை பொருள்கள் இல்லாத இந்தியா திட்டம், மண்டைக்காடு ஏ.எம்.கே. மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் இணைந்து நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தின.
ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, மருத்துவா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி முதல்வா் கெப்சிபாய் வரவேற்றாா். உலக போதை எதிா்ப்பு தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு- சான்றிதழை, கன்னியாகுமரி மாவட்ட மனநல திட்ட மருத்துவா் பாஸ்கா் வழங்கினாா்.
போதை விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை சுசீந்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் துரை வெளியிட, விஞ்ஞானி சண்முககுமாா் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மாணவா்கள் போதை எதிா்ப்பு உறுதிமொழியேற்றனா்.
முன்னதாக, பள்ளி வளாகத்திலிருந்து போதை எதிா்ப்பு விழிப்புணா்வு ஜோதி ஓட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கண்ணன் தொடக்கி வைத்தாா். இதில், ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள், ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள், மண்டைக்காடு ஏஎம்கே மது உள்பட பலா் பங்கேற்றனா்.