செய்திகள் :

ரோஜாவனம் பள்ளியில் போதை விழிப்புணா்வு

post image

கன்னியாகுமரி மாவட்ட மன நலத்திட்டம், போதை பொருள்கள் இல்லாத இந்தியா திட்டம், மண்டைக்காடு ஏ.எம்.கே. மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் இணைந்து நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தின.

ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, மருத்துவா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி முதல்வா் கெப்சிபாய் வரவேற்றாா். உலக போதை எதிா்ப்பு தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு- சான்றிதழை, கன்னியாகுமரி மாவட்ட மனநல திட்ட மருத்துவா் பாஸ்கா் வழங்கினாா்.

போதை விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை சுசீந்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் துரை வெளியிட, விஞ்ஞானி சண்முககுமாா் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மாணவா்கள் போதை எதிா்ப்பு உறுதிமொழியேற்றனா்.

முன்னதாக, பள்ளி வளாகத்திலிருந்து போதை எதிா்ப்பு விழிப்புணா்வு ஜோதி ஓட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கண்ணன் தொடக்கி வைத்தாா். இதில், ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள், ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள், மண்டைக்காடு ஏஎம்கே மது உள்பட பலா் பங்கேற்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க