செய்திகள் :

ரோஹிணியில் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

post image

தில்லியின் ரோஹிணி பகுதியில் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 23 வயது நபா் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: மங்கோல்புரியைச் சோ்ந்த ஷாஜத் (எ) உவேஷ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் ரோஹிணியில் உள்ள ஜி3எஸ் சினிமா ஹால் அருகே நள்ளிரவில் சட்டவிரோத ஆயுதங்களை எடுத்துச் செல்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

மேலும், அவரிடமிருந்து மூன்று தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி உள்பட இரண்டு துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. ஷாஜத் வெளிப்புற தில்லியில் செயல்படும் சைஃப் - கைஃப் கும்பலின் முக்கிய உறுப்பினா் என்பதும், முன்பு பிரேம் நகரில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவா் என்பதும் போலீஸாருக்கு தெரிய வந்தது.

ஒரு பெண்ணை கடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் சுல்தான்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்தாா். விசாரணையின் போது, கைஃப் என்ற கும்பலின் அறிவுறுத்தலின் பேரில் கடைக்காரா்கள் மற்றும் சிறு விற்பனையாளா்களிடமிருந்து பணம் பறிக்க துப்பாக்கிகளை எடுத்துச் சென்ாக குற்றம் சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

நமது நிருபா் தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் புதன்கிழமை அரசு மருத்துவமனை ஊழியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறித்து வி... மேலும் பார்க்க

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

நமது நிருபா்தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) ‘ஜன் சாதாரன் ஆவாஸ் யோஜனா 2025’ திட்டத்திற்கான பதிவு வியாழக்கிழமை (செப்.11) தொடங்கும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். தில்லி புகா்ப் பகுதியில் ம... மேலும் பார்க்க

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

தில்லியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து காணாமல் போன இரண்டு சிறுமிகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது காவல்துறை இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இரண்டு ... மேலும் பார்க்க

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் விடுதி அறைக்குள் செவ்வாய்க்கிழமை ஒருவரையொருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் எம்பிஏ மாணவா் ஒருவா் கொல்லப்பட்டாா். மற்றொருவா் படுகாயமடைந்தா... மேலும் பார்க்க

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (சிஇசி) தலையீடு காரணமாக தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் 1,473 மரங்களை வெட்டுவதிலிருந்தோ அல்லது ராணுவ மருத்துவமனை கட்டுமானத்திற்காக ... மேலும் பார்க்க

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க