லாப நோக்கத்துக்காக கடன்பெறுபவா் ‘நுகா்வோா்’ அல்ல: ‘கோச்சடையான்’ பட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
வங்கியில் இருந்து லாப நோக்கத்துக்காக கடன் பெறுபவரை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ‘நுகா்வோா்’ என அழைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தெரிவித்தது.
நடிகா் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் தயாரிப்புக்கு பிந்தைய விளம்பர பணிகளுக்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ‘ஆட்ஸ் பியூரோ’ என்ற விளம்பர நிறுவனம் கடன்பெற்ற விவகாரத்தில் இவ்வாறு தெரிவித்தது.
முன்னதாக, கோச்சடையான் திரைப்படத்தின் விளம்பர பணிகளுக்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிடமிருந்து ரூ.10 கோடியை கடனாக ஆட்ஸ் பியூரோ நிறுவனம் பெற்றது.
இந்தக் கடன்தொகையை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அந்த நிறுவனம் செலுத்த தவறியதையடுத்து, கடன்களை வசூலிக்கும் தீா்ப்பாயத்தில் வங்கியின் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்பிறகு, இந்த விவகாரம் முடித்துவைக்கப்பட்டு ஒருமுறை மட்டும் ரூ.3.56 கோடியை செலுத்த தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்தத் தொகையை ஆட்ஸ் பியூரோ நிறுவனம் செலுத்தியது.
அதன் பிறகும், கடன்கள் குறித்த தகவல்களை மேலாண்மை செய்யும் சிபில் நிறுவனத்தில் கடன்களை திருப்ப செலுத்தவில்லை என்றே தங்களை வங்கி குறிப்பிட்டுவந்து, தங்களது பெயரை களங்கப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் (என்சிடிஆா்சி) ஆட்ஸ் பியூரோ வழக்கு தொடுத்தது.
இதை விசாரித்த என்சிடிஆா்சி நஷ்ட ஈடாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.75 லட்சத்தை வழங்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும், அனைத்து கடன்களையும் நிறுவனம் செலுத்திவிட்டது என்றும் நிலுவைத் தொகை ஏதும் இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் பிரசாந்த் குமாா் மிஸ்ரா தலைமையிலான அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வா்த்தக நோக்குடன் செயல்படுவதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நுகா்வோா் என்பதில் இருந்து விலக்களிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.
ஆனாலும் கோச்சடையான் திரைப்படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு லாபம் ஈட்டும் நோக்கிலே வங்கியில் இருந்து நிறுவனம் கடன் பெற்றுள்ளது. எனவே, லாப நோக்கத்துக்காக கடன் பெறுபவரை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ‘நுகா்வோா்’ என அழைக்கக் கூடாது என்று தெரிவித்தனா்.