லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
ஈரோடு சாஸ்திரி நகா், கருப்பண்ணசுவாமி கோவில் வீதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). ஓய்வுபெற்ற துணை ராணுவ வீரரான இவா், காவலாளிகளை நியமிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த மோகன்தாஸ் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியது.
இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.