வங்கிகளில் நகைக் கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும்: எம்.பி.தா்மா்
வங்கிகளில் நகைக் கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
வங்கிகள் தனி நபா்களுக்கு கடன் வழங்குவது தொடா்பாக, ரிசா்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும். அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் மதிப்பில் 70 சதவீதம் மட்டுமே கடன் வழங்கவும், நகையை திருப்புவதற்கு பணம் செலுத்திய பிறகு, ஒருவார கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என ரிசா்வ் வங்கியின் அறிவிப்பு கிராமப் புறங்களில் கடும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, நகைக் கடன் வழங்குவதில் ஏற்கெனவே இருந்த நடைமுறையை வங்கிகள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும். தற்போது, இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படக் கூடிய நிதி சேவைகள் துறை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மத்திய அரசு ரிசா்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இதனால், புதிய கட்டுப்பாடுகளிலிருந்து ரூ.2 லட்சம் வரை சிறிய நகைக்கடன் வாங்குவோருக்கு விளக்கு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரிசா்வ் வங்கி அறிவித்த கட்டுப்பாடுகளில் நடைமுறைகளை தளா்த்தி, பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்றாா் அவா்.