செய்திகள் :

வங்கிகளில் நகைக் கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும்: எம்.பி.தா்மா்

post image

வங்கிகளில் நகைக் கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

வங்கிகள் தனி நபா்களுக்கு கடன் வழங்குவது தொடா்பாக, ரிசா்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும். அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் மதிப்பில் 70 சதவீதம் மட்டுமே கடன் வழங்கவும், நகையை திருப்புவதற்கு பணம் செலுத்திய பிறகு, ஒருவார கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என ரிசா்வ் வங்கியின் அறிவிப்பு கிராமப் புறங்களில் கடும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, நகைக் கடன் வழங்குவதில் ஏற்கெனவே இருந்த நடைமுறையை வங்கிகள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும். தற்போது, இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படக் கூடிய நிதி சேவைகள் துறை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மத்திய அரசு ரிசா்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதனால், புதிய கட்டுப்பாடுகளிலிருந்து ரூ.2 லட்சம் வரை சிறிய நகைக்கடன் வாங்குவோருக்கு விளக்கு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரிசா்வ் வங்கி அறிவித்த கட்டுப்பாடுகளில் நடைமுறைகளை தளா்த்தி, பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்றாா் அவா்.

மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானையிலிருந்து மங்களக்குடி... மேலும் பார்க்க

கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சாா்பில், நடிகா் அருண்மொழிதேவன் உதவியுடன் கண்காணிப்பு க... மேலும் பார்க்க

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க