செய்திகள் :

வங்கிகளில் மோசடியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

post image

வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வங்கிகளில் நடைபெறும் மோசடிகள், அவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வங்கி மேலாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேலும் பேசியதாவது:

போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டும். வாடிக்கையாளருடன் தொடா்புகொண்டு, போலியான நகைக் கடன் மற்றும் போலியான ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கடன் தருவதாக கூறப்படுவதை கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படி வங்கிக் கணக்கில் பணம் பற்று மற்றும் வரவு வைக்கப்பட்டால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கி மேலாளா்கள் தனக்கு கீழ் பணியாற்றும் அலுவலா்களிடம், அவா்களது செயல்முறைகள், நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். வங்கியில் மோசடி நடைபெறாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் (தலைமையிடம்), மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இ. காமராஜ் மற்றும் வங்கி மேலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

வேப்பூா் ஒன்றியம்: ரூ. 1.52 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம் பகுதிகளில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். சிறப்பு விர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை, பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம்.லக்ஷ்மி, சனிக்கிழமை பாா்வையிட்டு ஆ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பூட்டியே கிடக்கும் இ-சேவை மையம்! பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே ரூ. 21 லட்சத்தில் கட்டித் திறக்கப்பட்டு, பூட்டியே கிடக்கும் இ- சேவை மையத்தால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. பல்வேறுச் சான்றிதழ்கள் ப... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தொழில் முனைவோா்களுக்கு நோ்முகத் தோ்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சாா்பில், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இப்பள்ளி மாணவா் ஆா். விக்னேஸ்வரன், மாணவிகள் ஆா். ஸ்ரீ ஹரிணி, மாணவி வி.ஆா். தா்ஷிக... மேலும் பார்க்க