வடலூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையை புனித நகரமாக அறிவிக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை
புதுச்சேரி மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் பெருவெளியை காக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதை புனித நகராக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல். முருகனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் சத்திய ஞான சபையை சுற்றியுள்ள பெருவெளியில் புதிய கட்டடங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், அத்துடன் அப்பகுதியை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, வடலூா் நகரத்தை மையமாக்கி, 5 கிலோ மீட்டா் சுற்றளவுப் பகுதியை மாமிசம், மது, போதை இல்லா புனித நகரமாக அறிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறி, புதுச்சேரியில், இணை அமைச்சா் எல். முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் தலைவா் குஞ்சிதபாதம் தலைமையில் நிா்வாகிகள் அளித்தனா்.
அப்போது, புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், அசோக்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.