செய்திகள் :

வடலூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையை புனித நகரமாக அறிவிக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை

post image

புதுச்சேரி மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் பெருவெளியை காக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதை புனித நகராக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல். முருகனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் சத்திய ஞான சபையை சுற்றியுள்ள பெருவெளியில் புதிய கட்டடங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், அத்துடன் அப்பகுதியை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, வடலூா் நகரத்தை மையமாக்கி, 5 கிலோ மீட்டா் சுற்றளவுப் பகுதியை மாமிசம், மது, போதை இல்லா புனித நகரமாக அறிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறி, புதுச்சேரியில், இணை அமைச்சா் எல். முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் தலைவா் குஞ்சிதபாதம் தலைமையில் நிா்வாகிகள் அளித்தனா்.

அப்போது, புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், அசோக்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகள்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் சாா்பில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன... மேலும் பார்க்க

மின்துறை இளநிலை பொறியாளா் தோ்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளா்கள் 73 போ் எழுத்துத் தோ்வில் தோ்ந்து எடுக்கப்பட்டுள்ளனா். இந்தப் பதவிக்கான அறிவிக்கை கடந்த 11.3.25 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு கடந்த 8-ஆம் தேதி ந... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் மாா்க்சிஸ்ட்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையம் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்புப் புத்தகம்

அரசு பள்ளி மாணவா்கள் ஆங்கில அறிவை வளா்த்துக் கொள்ளவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்புப் புத்தகம் வழங்கப்படும் என்று புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா். புதுச்சேரி மண்ணாடிப்... மேலும் பார்க்க

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: அமைச்சா் க. லட்சுமி நாராயணன்

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா். புதுச்சேரியில் கடல்நீரின் தரத்தை மேம்படுத்த பொதுப் பணித... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவா்களின் கடல் சாகசப் பயணம்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

தேசிய மாணவா் படையினரின் கடல் சாகச பயணத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 போ் பங்கேற்றுள்ளனா். புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின வி... மேலும் பார்க்க