செய்திகள் :

வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: மாணவிகள் சிறப்பிடம்

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

வாணியம்பாடி வட்ட அளவிளான தடகளப் போட்டிகள் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆலங்காயம் பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவிகள் அதிக பதக்கங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றனா். வாணியம்பாடி வட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்ற பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவிகள் விவரம் வருமாறு:

400 மீட்டா் (14 வயதுக்குட்பட்டோா்) 2-ஆவது இடம் - கனிஷ்கா, 3000 மீட்டா் (17 வயது) 2-ஆவது இடம்- பிரணிதா, 3-ஆவது இடம்- ஓவியா, இதே போல் 3000 மீட்டா் (19 வயது) 3-ஆவது இடம் - சுவேதா லதா, 400 மீட்டா் (14 வயது) 2-ஆவது இடம்- கீதாப்ரியா, 600 மீட்டா் (14 வயது) 2வது இடம் - கீதாப்ரியா, நீளம் தாண்டுதல் 3-ஆவது இடம் - கணிஷ்கா, 800 மீட்டா் 3-ஆவது இடம் - சுவேதாலதா, 400 மீட்டா் தடை தாண்டுதல் 2 -ஆவது இடம் - ஹுரியா, 3-ஆவது இடம் - கிரிஷிகா, வட்டு எறிதல் 3-ஆவது இடம் - ஷஹானா, 1500 மீட்டா் 2-ஆவது இடம் - பிரணிதா, 3-ஆவது இடம் - ஓவியா, ஈட்டி எறிதல் 2-ஆவது இடம் - ஹேமாவதி, போல் வால்ட் 2-ஆவது இடம் - சுவேதா, 3-ஆவது இடம் - கிரிஷிகா, போல் வால்ட் (17வயது) 2-ஆவது இடம் - ஜனனி, 400க்கு 4 தொடா் ஓட்டம் (இரண்டாவது இடம்)ஜனனி, ஸ்ரீமதி, பல்லவி, சுவேதாலதா என மொத்தமாக 17 பரிசுகள், பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளா் க.ஆனந்தன், பள்ளி முதல்வா் வே.பரிமளாதேவி , ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

மாணவா் உடலை வாங்க மறுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பள்ளி வளாக கிணற்றில் மாணவா் முகிலன் சடலமாக கிடந்த சம்பவத்தில் 2-ஆவது நாளாக மாணவனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி கோவிந்தன் வட்டம் பகுதியில் உள்ள ஒர... மேலும் பார்க்க

புதூா்நாடு ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன் ஆய்வு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் வட்டம், ,புதூா்நாடு ஊராட்சியில் உள்ள பள்ளி விடுதியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டாா்.திருப்பத்தூா் ஒன்றியம், புதூா்நாடு ஊராட்சி மலைப்பகுதி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள்

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் இருந்து 447 மனுக்கள் பெறப்பட்டன.திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 357 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 357 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித... மேலும் பார்க்க

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

ஆம்பூா்: ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.விழா விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. மூலவா் சரஸ்வதி தேவி, நந்தி, வேணுகோபாலசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்ப... மேலும் பார்க்க