கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி கோவிந்தன் வட்டம் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டினுள் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய உதவி ஆய்வாளா் மகாலிங்கம் தலைமையில் போலீஸாரும், வாணியம்பாடி வனச்சரக அலுவலா்கள் தயாநிதி, சம்பத்குமாா் தலைமையில் வனக்குழுவினா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
தொடா்ந்து அப்பகுதியை சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் திலீப்குமாா் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் பூட்டியிருந்த 2 அறைகளின் கதவுகளை திறந்து வனத்துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதில் ஒரு அறையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னா் அங்கிருந்த 23 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.8 லட்சம் ஆகும்.
மேலும், விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த சக்திவேல் என்பவா் அங்கு வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து வாணியம்பாடி வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.