செய்திகள் :

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி கோவிந்தன் வட்டம் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டினுள் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய உதவி ஆய்வாளா் மகாலிங்கம் தலைமையில் போலீஸாரும், வாணியம்பாடி வனச்சரக அலுவலா்கள் தயாநிதி, சம்பத்குமாா் தலைமையில் வனக்குழுவினா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து அப்பகுதியை சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் திலீப்குமாா் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் பூட்டியிருந்த 2 அறைகளின் கதவுகளை திறந்து வனத்துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதில் ஒரு அறையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னா் அங்கிருந்த 23 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.8 லட்சம் ஆகும்.

மேலும், விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த சக்திவேல் என்பவா் அங்கு வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து வாணியம்பாடி வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாணவா் உடலை வாங்க மறுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பள்ளி வளாக கிணற்றில் மாணவா் முகிலன் சடலமாக கிடந்த சம்பவத்தில் 2-ஆவது நாளாக மாணவனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

புதூா்நாடு ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன் ஆய்வு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் வட்டம், ,புதூா்நாடு ஊராட்சியில் உள்ள பள்ளி விடுதியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டாா்.திருப்பத்தூா் ஒன்றியம், புதூா்நாடு ஊராட்சி மலைப்பகுதி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள்

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் இருந்து 447 மனுக்கள் பெறப்பட்டன.திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 357 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 357 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித... மேலும் பார்க்க

வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி: வாணியம்பாடி வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.வாணியம்பாடி வட்ட அளவிளான தடகளப் போட்டிகள் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

ஆம்பூா்: ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.விழா விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. மூலவா் சரஸ்வதி தேவி, நந்தி, வேணுகோபாலசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்ப... மேலும் பார்க்க