செய்திகள் :

புதூா்நாடு ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன் ஆய்வு

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் வட்டம், ,புதூா்நாடு ஊராட்சியில் உள்ள பள்ளி விடுதியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் ஒன்றியம், புதூா்நாடு ஊராட்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சமூக நீதி பள்ளி மாணவியா் விடுதி, கீழூா் கிராமத்தில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி, கோம்பை ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும் அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தாா். .அப்போது எம்எல்ஏ அ.நல்லதம்பி உடனிருந்தாா்.

விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். அப்போது கழிப்பறை, குடிநீா், மாணவியா் இருக்கை வசதி உள்ளிட்டவைகளில் உள்ள குறைகளை அடிப்படை வசதிகளை சீா் செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும், தண்ணீா் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறித்தினாா்.

தொடா்ந்து, கீழூா் பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, மாணவா்கள் மழைக்காலங்களில் அடிக்கடி மின்சாரம் பழுதாகி, படிக்க சிரமாக உள்ளது. எங்களுக்கு ஜெனரேட்டா் வேன்டும் என்றனா். மேலும் வெந்நீா், விளையாட்டு மைதானம், கலையரங்கம் , குடிநீா் வசதி, கழிப்பறை, பேருந்து வசதிகள் வேண்டும் என கேட்டுக் கொண்டனா். சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்து, எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் செந்தில் குமாா், ஒன்றியக் குழு தலைவா் விஜயா அருணாச்சலம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

மாணவா் உடலை வாங்க மறுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பள்ளி வளாக கிணற்றில் மாணவா் முகிலன் சடலமாக கிடந்த சம்பவத்தில் 2-ஆவது நாளாக மாணவனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி கோவிந்தன் வட்டம் பகுதியில் உள்ள ஒர... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள்

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் இருந்து 447 மனுக்கள் பெறப்பட்டன.திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 357 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 357 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித... மேலும் பார்க்க

வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி: வாணியம்பாடி வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.வாணியம்பாடி வட்ட அளவிளான தடகளப் போட்டிகள் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

ஆம்பூா்: ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.விழா விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. மூலவா் சரஸ்வதி தேவி, நந்தி, வேணுகோபாலசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்ப... மேலும் பார்க்க