செய்திகள் :

வண்டறந்தாங்கலில் ரூ. 77.89 லட்சத்தில் கிராம அறிவுசாா் மையம்! - அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டினாா்

post image

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ. 77.89 லட்சத்தில் கிராம அறிவுசாா் மையம் அமைக்க கட்டுமானப் பணிக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டினாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ. 77.89 லட்சம் மதிப்பில் கிராம அறிவுசாா் மையம் அமைக்கப்பட உள்ளது. 203.90 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்படும் இந்த அறிவுசாா் மையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 15 கிராமங்களைச் சோ்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை அமைச்சா் துரைமுருகன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துப் பேசியது:

தாட்கோ மூலம் இந்தப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் 4 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் விரைவில் திறக்கப்படும்.

இதன் மூலம் வண்டறந்தாங்கலை சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற முடியும். இந்த மையம் பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் சமுதாயக் கூடமாகவும் பயன்படுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வே.வேல்முருகன், வண்டறந்தாங்கல் ஊராட்சித் தலைவா் ராகேஷ், தாட்கோ செயற்பொறியாளா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வே.வேல்முருகன், வண்ட்றந்தாங்கல் ஊராட்சித் தலைவா் ராகேஷ், தாட்கோ செயற்பொறியாளா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க