செய்திகள் :

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

post image

வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை தடை செய்யக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடிதம் வழங்கவிருக்கிறார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் அவர்கள், சுதந்திர தினமான இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொலைக்காட்சியின் அனைத்துக் குற்றப்பிரிவு செய்தியாளர்களையும் நேரடியாக சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்ததோடு நலம் விசாரித்தார்.

பின்னர் குற்றப்பிரிவு செய்தியாளர்களின் பிறந்த நாள் அன்று நேரடியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

பயங்கரமான ஆயுதங்கள் மூலமாக வன்முறையை தூண்டும் வகையிலும், குற்றங்களுக்கு வழிவகுக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை தடுக்க கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு, தமிழக அரசு மூலமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடிதம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் வன்முறையைத் தூண்டும் வகையிலான ரீல்ஸ்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தனி குழுவாக சைபர் கிரைம் மூலம் கண்காணிக்கவும் வழிவகை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக, தவெக புறக்கணிப்பு; அதிமுக, பாஜக பங்கேற்பு!

சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் இன்பதுரை, பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி: திருமாவளவன்

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையை முன்வைத்து திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக பி... மேலும் பார்க்க

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை காபி - பேஸ்ட் செய்து புதுப்பெயர் சூட்டுகிறார் தமிழக முதல்வர் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்... மேலும் பார்க்க

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமையில் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார். இருப்பினும், அவரது அழைப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், திமுக கூ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா, ... மேலும் பார்க்க

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் தேரோட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு கிராமத்தில் உள்ள மோட்ச ராக்கினி மாதா என்று அழைக்கப்படும் விண்ணேற்ற மாதா கோயிலின் நானூற்று அறுபத்தெட்டாவது (468) ஆண்டுத் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. ஐநூறு ஆண... மேலும் பார்க்க