செய்திகள் :

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

post image

அமெரிக்கா டாலர் மதிப்பைவிட ஜப்பான், இங்கிலாந்து கரன்சி மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் கூறி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். மேலும், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் அமெரிக்க கருவூலத்துக்கு அதிகளவில் நிதி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகள் மீது வரி விதிக்கப்பட்ட நிலையில், நட்பு நாடான ஜப்பான் மீதும் 15 சதவிகித வரியை அறிவித்தார். இந்த நிலையில், ஜப்பான் கரன்சியான யென் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மதிப்பு உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், டிரம்ப்பின் வரி விதிப்பும் முக்கிய காரணமாகக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக யென் 0.4 சதவிகிதமும், யூரோ 0.25 சதவிகிதமும், இங்கிலாந்தின் பவுண்டு 0.20 சதவிகிதமும், ஆஸ்திரேலிய டாலர் 0.2 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, அந்நாட்டில் முதலீடுகள் குறைந்ததுடன், அமெரிக்க டாலரைவிட தங்கம் மற்றும் மற்ற கரன்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இங்கிருந்துதான், டாலர் மதிப்பு சரியத் தொடங்கியது எனலாம்.

முதலீடுகள் குறைந்ததால், பணவீக்கம் அதிகரித்தது. இதனால், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. வட்டி விகிதம் அதிகமாக இருந்தால்தான் முதலீடுகள் வரப்பெறும். இதுவே, சங்கிலித் தொடர்போல டாலர் மதிப்பை பின்னோக்கித் தள்ளத் தொடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா, ரஷியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியாலும், அவர்கள் சொந்த கரன்சியை பயன்படுத்துவதாலும் அமெரிக்க டாலர் சரிந்தது எனலாம்.

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குழைக்கும் விதமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரியே புதின் பேச்சுக்கு வரக் காரணம்! டிரம்ப்

இந்தியா மீதான வரி விதிப்பே ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, ... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தானில் 3 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்த... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தி... மேலும் பார்க்க

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம... மேலும் பார்க்க