செய்திகள் :

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

post image

தில்லியில் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள முகலாய மன்னரான ஹுமாயூனின் கல்லறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்பட ஐந்து பேர் பலியாகினர்.

கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு தர்காவில் மேற்கூரை விழுந்த இந்தச் சம்பவத்தில், மேலும் ஏழு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, பிற்பகல் 3:51 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தில்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஹுமாயூனின் கல்லறை, தில்லியில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை.

சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லறையின் கட்டமைப்பு பலவீனமடைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

5 dead, several trapped as wall collapses inside Delhi's Humayun's Tomb complex

இதையும் படிக்க :நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

பாஜவை தமிழகம் முழுவதும் வளர்க்க கடுமையாக உழைத்தவர் இல.கணேசன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்தஇல.கணேசன், நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றி வந்த... மேலும் பார்க்க

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

அடுத்த மக்களவைத் தேர்தலிலும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பாஜகவின் நிலைப்பாட்டால், ஆர்எஸ்எஸ்ஸுடனான நல்சூழலில் கசப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.அரசிய... மேலும் பார்க்க

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80.பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ... மேலும் பார்க்க

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் ... மேலும் பார்க்க

ஹுமாயூன் கல்லறை வளாக கூரை இடிந்து விபத்து: உள்ளே சிக்கிய 8 பேரின் கதி என்ன?

தில்லியில் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூனின் கல்லறையின் ஒரு குவிமாடம் வெள்ளிக்கிழமை மாலையில் இடிந்து விழுந்... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.தேசியத் தலைநகா் தில்லியில் ... மேலும் பார்க்க