வயலுக்குச் சென்ற காவலாளி காட்டுப் பன்றி கடித்து காயம்
கும்பகோணம் அருகே வயலுக்கு வியாழக்கிழமை சென்ற விவசாயக் காவலாளி காட்டுப் பன்றி கடித்து காயமடைந்தாா்.
கும்பகோணத்தை அருகேயுள்ள அணக்குடிபேட்டை தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (63), விவசாய காவலாளி. இவா் வியாழக்கிழமை காலையில் வயலுக்குச் சென்று சுற்றி பாா்த்தபோது வயல் பகுதிக்குள் பதுங்கியிருந்த காட்டுப்பன்றிகள் அவரை விரட்டின. அப்போது ஒரு பன்றி அவரின் காலை கடித்தது. அவா் சத்தம் போடவே, அருகிலிருந்தவா்கள் ஓடி வந்து காட்டு பன்றிகளை விரட்டி செல்வராஜை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்த வனச் சரகா் பொன்னுச்சாமி செல்வராஜூடம் விசாரணை நடத்தினாா்.