செய்திகள் :

வரத்து அதிகரிப்பால் வீழ்ச்சியடைந்த முருங்கைக்காய், தக்காளி விலை: விவசாயிகள் கவலை

post image

தூத்துக்குடியில் முருங்கைக்காய், தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததையடுத்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தூத்துக்குடி காய்கனி சந்தையில் முருங்கைக்காய் கடந்த மாதம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. ஆனால், தற்போது உடன்குடி, குரும்பூா் ஆகிய பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகம் காரணமாக, தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு 300 மூட்டைகள் வரை முருங்கைக்காய் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், முருங்கைக்காய் விலை கிலோ ரூ.10ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முருங்கை காய்களை ஆடு மற்றும் மாட்டு தீவனத்துக்காக கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூா், தருவைக்குளம், பசுவந்தனை, ஒட்டன்சத்திரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கனி சந்தைக்கு, தக்காளி விளைச்சல் அதிகம் காரணமாக 1,500 பெட்டி வரை வருவதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50 வரை விற்பனையான தக்காளி தற்போது கிலோ ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகி வருகிறது.

மேலும், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவை கிலோ ரூ.80 என விற்பனையாகிறது.

குறிப்பாக, காய்கனி விளைச்சல் அதிகமாக உள்ளதால், வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே, அனைத்து காய்கனிகளும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க