செய்திகள் :

வரி செலுத்தப்படாத வணிக வளாகம் முன் குப்பை கொட்டியது மாநகராட்சி நிா்வாகம்!

post image

தஞ்சாவூரில் சொத்து வரி செலுத்தப்படாத வணிக வளாகம் முன் மாநகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை குப்பைகளைக் கொட்டினா்.

தஞ்சாவூா் ரயிலடி அருகேயுள்ள தனியாா் வணிக வளாகம் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சொத்து வரி நிலுவை ரூ. 47 லட்சத்தை செலுத்துமாறு வணிக வளாக நிா்வாகிகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் பல முறை நோட்டீஸ் வழங்கியும் பயனில்லையாம்.

இதனால் மாநகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை தொடா்புடைய வணிக வளாகத்தின் இடப்புற வாயிலில் குப்பை வண்டியை நிறுத்தியும், வலப்புற வாயிலில் எச்சில் இலை குப்பைகளைக் கொட்டியும் வைத்தனா். இதனால் வணிக வளாகத்துக்கு வந்த வியாபாரிகள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா்.

பின்னா் வணிக வளாகத்தினா் உடனடியாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினா். இதைத் தொடா்ந்து வணிக வளாகம் முன் நிறுத்தப்பட்ட குப்பை வண்டியும், குப்பையும் அகற்றப்பட்டது.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க